×
பித்னாக்களில் ஈடுபடும் முஸ்லிம்களும் தாம் சரியான வழியில் இருப்பதாக கருதுகிறார்கள். இந்த பித்னாக்கள் மூலம் அல்லாஹ் மக்களை சோதிக்கிறான். இது அல்லாஹ்வின் நியதி. நபி (ஸல்) அவர்களும் இதனை பற்றி எச்சரிக்கை செய்தார்கள். கிதாபுல் பிதன் என்ற நூல் இது பற்றி குறிப்பிடுகிறது. நன்மைகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். ஆனால் பித்னாக்கள் எம்மை தேடி வரும். உடல் இச்சை, பணம் தேடும் முறை, கொலை போன்ற பித்னாக்கள் இவற்றில் சில. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மார்க்க விஷயத்தில் ஏற்படும் குழப்பம் மிகவும் மோசமானது.