×
ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வ மானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.

    ரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன?

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    அஷ்ஷேக்: எம்.ஜே.எம். ரிஸ்வான் (மதனி)

    2014 - 1435

    القنوت في وتر العشر الأخير من رمضان

    « باللغة التاميلية »

    محمد رضوان

    2014 - 1435

    ரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன?

    ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு இதோ

    அஷ்ஷேக்: எம்.ஜே.எம். ரிஸ்வான் (மதனி)

    (தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர்.)

    சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலை பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு எடுத்து எழுதுகின்றோம்.

    ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர் வமானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள் கின்றோம்.

    குனூத் இடம் பெறும் நூல்களும் அறிஞர்களின் விமர்சனங்களும்

    ஹதீஸ்கலை அறிஞர்களான அபூதாவூத். பைஹகி, இப்னு அபீஷைபா, இப்னுல் அதீ போன்றோர் தமது நூற்களில் இக்குனூத் பற்றிய விளக்கத்தினைப் பதிவுசெய்துள்ள னர்.

    இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் சுனனில் (அவர்களின் ஹதீஸ் நூலில்) வித்ர் குனூத் பற்றி ஒரு ஹதீஸை அறிவித்த பின் மற்றொமொரு செய்தியை பின்வரு மாறு அறிவிக் கிறார்கள். அதாவது உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் உபை பின் கஃப் (ரழி) அவர்களின் தலைமையில் (ரமழானில்) மக்களை ஒன்று சேர்த்திருந்தார்கள். அவர் மக்களுக்கு இருபது இரவுகள் தொழுகை நடத்தினார். மிஞ்சிய அரைவாசியில் குனூத் ஓதுவார் என ஹஸன் அல் பஸரி என்பவர் உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கும் செய்திகள் பற்றி விமர்சிக்கும் இமாம் அபூதாவூத் அவர்கள்.

    قَالَ أَبُو دَاوُد: وَهَذَا يَدُلُّ عَلَى أَنَّ الَّذِي ذُكِرَ فِي الْقُنُوتِ لَيْسَ بِشَيْءٍ وَهَذَانِ الْحَدِيثَانِ يَدُلَّانِ عَلَى ضَعْفِ حَدِيثِ أُبَيٍّ... ( سنن أبي داود)

    குனூத் பற்றிக்கூறப்படும் இந்தச் செய்தி ஒன்றுக்கும் உத வாதது. இந்த இரு செய்திகளிலும் உபை பின் கஃப் (ரழி) அவர்களின் செய்தி பலவீனமானது என்பதைக் காட்டுகின்றது. (பார்க்க: சுனன் அபீதாவூத்) மேற்படி செய்தியை அபூதாவூத் இமாம் வழியாக பைஹகி இமாம் அவர்கள் அறிவித் துள்ளார்கள்.

    மேற்படி செய்தியில் காணப்படும் குறைகள்

    மேற்படி செய்தியில் இடம் பெறும் அறிவிப்பாளர் தொடரில் ஹஸனுல் பஸரி என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக் காதவர். உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் இறுதி இரண்டு வருட காலத்தில் பிறந்த வர். உமர் (ரழி) அவர்களை சந்திக் காதவர். இப்படிப்படிப்பட்ட ஒருவரால் இந்தச் செய்தி கூறப் படுவதை ஹதீஸ்கலை இமாம்கள் முன்கதிஃ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலை என வர்ணிப்பதுடன், அந்த அறி விப் பையும் தள்ளுபடி செய்வர். எனவே இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய, சட்டம் எடுக்க முடியாத அறிவிப்பு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    மேற்படி செய்தியை விமர்சிக்கும் இமாம்கள்

    இந்தச் செய்தி ஒன்றுக்கும் உதவாதது. அது பலவீனமானது என இமாம் அபூ தாவூத் (ரஹ்) அவர்கள் விமர்சித்ததை ஏற்கெனவே எழுதி யுள்ளோம். இமாம் ஸைலயி (ரஹ்) என்பவர் ஹனபி மத்ஹப் சார்ந்த நூலான ஷஅல்ஹிதாயா என்ற நூலில் இடம் பெறும் ஹதீஸ்களை திற னாய்விற்கு உட்படுத்தி ஷநஸபுர் ராயா என்ற நூலை எழுதியுள்ளார்கள். ரமழான் அரை வாசியில் ஓதப்படும் குனூத் பற்றிக் குறிப் பிடும்போது அது பற்றி இரண்டு ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன எனக் கூறிவிட்டு, இமாம் அபூதாவூத் அவர்களின் கிரந்தத்தில் இடம்பெறும் மேற்படி ஹதீஸை முதலாவது ஹதீஸாக எடுத்தெழுதிய பின்னர்

    وَهَذَا مُنْقَطِعٌ ، فَإِنَّ الْحَسَنَ لَمْ يُدْرِكْ عُمَرَ ....

    (نصب الراية في تخريج أحاديث الهداية - ج 3

    ص 175)

    இது முன்கதிஃ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலையாகும். ஏனெனில் ஹஸன் என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக்க வில்லை எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: நஸபுர்ராயா, பாகம்: 3.பக்கம். 175) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.)

    மேலும் மற்றொரு அறிவிப்பு அபூதாவூதில் இடம்பெறுகின்றது. அதில் مَجْهُولٌ وَفِيه விலாசமற்ற, யார் என்று அறியப்படாதவர் இடம்பெறுகிறார் என அதே நூலில் விமர்சித்த பின்னர்,

    وَقَالَ النَّوَوِيُّ فِي ' الْخُلَاصَةِ ' : الطَّرِيقَانِ ضَعِيفَانِ

    அல்ஹுலாஸா என்ற நூலில் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இவ்விரண்டு வழிகளும் பலவீன மானவையே எனக் கூறி யுள்ளதாகக் கூறுகிறார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் ரமழானின் அரை வாசியில் குனூத் ஓதுபவர்களாக இருந் தார்கள் என அபூஆதிகா எனப்படும் தரீப் பின் சுலைமான் என்பவர் அனஸ் (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தியை இரண்டாவது ஹதீஸாகக் குறிப்பிடும் அதே இமாம் ஸைலயி அவர்கள் இதனை இப்னு அதிய் அவர்கள் தனது அல்காமில் என்ற (பலவீனமான அறிவிப்பாளர்கள் பற்றி குறிப்பிடும்) நூலில் குறிப்பிடுவதாகக் கூறிய பின்

    وَأَبُو عَاتِكَةَ ضَعِيفٌ ، قَالَ الْبَيْهَقِيُّ : هَذَا حَدِيثٌ لَا يَصِحُّ إسْنَادُهُ

    அபூ ஆதிகா பலவீனமானவர் எனத் தீர்ப்பை முன்வைப்பதோடு, இது அறிவிப்பாளர் தொடர் சரியில்லாத ஹதீஸ் என இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் கூறி யதாகவும் குறிப்பிடுகிறார் கள்.(பார்க்க: நஸபுர்ராயா, பாகம்: 3.பக்கம். 175)

    இந்தச் செய்தி பற்றி விபரிக்கும் அபூதாவூதின் விரிவுரை அறிஞரான அல் முபாரக்பூரி என்பவர், மேற்படி செய்தியானது அறிவிக்கப்படுகின்றது என்ற மறைமுகமான, சந்தேகத்திற்கு இடம்பாடான சொற்றொடரைக் கொண்ட ஒரு செய்தி யாகவே அறிவிக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ள தையும் இதன் பலவீனத்தின் காரணிகளில் முக்கியமான காரணியாக இங்கு கவனித்தில் கொள்ளவும் வேண்டும். (அவ்னுல் மஃபூத் ஷரஹ் சுனன் அபூதாவூத். பாகம்: 3: பக்கம், 360) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.)

    குறிப்பு: நபியவர்கள் பெயரால் அறிவிக்கப் படுகிறது, சொல் லப்படுகிறது போன்ற அமைப்பை ஹதீஸ் கலை அறிஞர்கள் (ஸீகதுத் தம்ரீழ்) நோய், பலவீனம் சார்ந்த அமைப்பு என வர்ணிப்பர். குறித்த செய்தியை ஹதீஸாக ஏற்க முடியாது என்ப தற்கான காரணிகளில் இதுவும் உள்ளடக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

    ஷாபி மத்ஹப் அறிஞரின் தீர்ப்பு:

    ஷாபி மத்ஹப் அறிஞரான இமாம் நவவி (ரஹ்) அவர்கள் அல்மஜ்மூஃ என்ற அவரது நூலில் இந்தச் செய்தியை எடுத்தெழுதிய பின்

    .... هذا لفظ أبي داود والبيهقي وهو منقطع لان الحسن لم يدرك عمر بل ولد لسنتين بقيتا من خلافة عمر بن الخطاب رضى الله عنه ورواه أبو داود أيضا عن ابن سيرين عن بعض أصحابه أن أبى بن كعب أمهم يعنى في رمضان وكان يقنت في النصف الآخر منه وهذا أيضا ضعيف لانه رواية مجهول (( المجموع شرح المهذب - (ج 4ص 18)

    இது அபூதாவூத், மற்றும் பைஹகி ஆகியோரின் அறிவிப்புக்களாகும். இது முன்கதிஃ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலையாகும். ஏனெனில் ஹஸன் என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக்கவில்லை. மாத்திரமின்றி உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களின் ஆட்சியில் மீதமிருந்த இரண்டு வருடங்களுக் குள்ளதான் ஹஸன் பிறந்திருக்கின்றார். பிறந்த இரண்டு வயதில் அவர் உமர் (ரழி) வழியாக எப்படி அறிவிக்க லாம் எனக் குறிப்பிட்ட பின்னர், இப்னு ஸீரீன் என்பவர் நபிகள் நாய கத்தின் தோழர்கள் சிலரைத் தொட்டும் அறிவிப்பதாக இடம் பெறும் அறிவிப்பில் மஜ்ஹுல் அறிமுகமற்றவர்கள் இடம் பெறுகிறார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: அல்மஜ்மூஃ பாகம்: 4: பக்கம், 18) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.)

    இமாம் அர்ராபிஈ அல்கபீர் என்பவரின் பிக்ஹ் நூலில் காணப்படும் ஹதீஸ்களை பகுப்பாய்வு செய்த இப்னு ஹஜர் அல்அஸ் கலானி (ரஹ்) அவர்கள் தல்ஹீசுல் ஹபீர் என்ற நூலில் இந்தச் செய்தி பற்றி எடுத்தெழுதிய பின்

    وَرَوَى الْبَيْهَقِيُّ وَابْنُ عَدِيٍّ فِي نِصْفِ رَمَضَانَ الْأَخِيرِ مِنْ حَدِيثِ أَنَسٍ مَرْفُوعًا ، وَإِسْنَادُهُ وَاهٍ .(( التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير - (ج 2ص 122)

    பைஹகி அவர்களும், இப்னு அதிய் அவர்களும் அனஸ் (ரழி) அவர்கள் வழியாக இது பற்றி அறிவித்திருக்கிறார்கள். அதன் அறிவிப்பாளர் வரிசை وَاه وَإِسْنَادُهُ மிகவும் பலவீனமானது (புஷ்வானமானது) எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: தல்ஹீ சுல் ஹபீர் பாகம்: 2: பக்கம், 122) (இலத்திர னியல் நூலகம். இரண்டாம் வெளியீடு)

    இவ்வளவு தெளிவான தீர்ப்பை மறுத் துரைப்போரிடம் இது பற்றி எழுதுபவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது, கண் ணியத்திற்குரிய அந்த இமாம்களையே குறை கூறுவதாக அமையும். இமாம்கள் இந்தச் செய்தி ஆதாரத்திற்குரியதல்ல என்று திறனாய்வு செய்து எழுதியதைத்தான் நாமும் மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்.

    ஆதாரமின்றி தவ்ஹீத் வாதிகளை கண்மூடித் தனமாக விமர்சிப்பவர்கள் அவர்கள் ஏற்றுக் கொண்ட மத்ஹபு அறிஞர் களின் தீர்ப்பை முன்வைத்தே இதை எழுதியுள்ளோம். குனூத் எப்படி ஓத வேண்டும் என்பதையும் இமாம்கள் பின்வரு மாறு ஹதீஸ்களின் அடிப்படையில் விளக் கப்படுத்துகிறார்கள்.

    قُلْتُ : وَيُمْكِنُ الْفَرَقُ بَيْنَ الْقُنُوتِ الَّذِي فِي النَّوَازِلِ فَيُسْتَحَبُّ الْجَهْرُ فِيهِ كَمَا وَرَدَ ، وَبَيْنَ الَّذِي هُوَ رَاتِبٌ إنْ صَحَّ ، فَلَيْسَ فِي شَيْءٍ مِنْ الْأَخْبَارِ مَا يَدُلُّ عَلَى أَنَّهُ جَهَرَ بِهِ بَلْ الْقِيَاسُ أَنَّهُ يُسَنُّ بِهِ كَبَاقِي الْأَذْكَارِ الَّتِي تُقَالُ فِي الْأَرْكَانِ . التلخيص الحبير في تخريج أحاديث (الرافعي الكبير - (ج 1ص 490

    குனூத்துன் நவாஸில் குழப்பமான சூழ்நிலையில் ஓதப்படும் குனூத்திற்கும் வித்ருடைய குனூத்திற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. (குனூத்துன் நவாஸிலில்) நபிமொழியில் வந்தி ருப்பது போன்று பகிரங்கமாக ஓதுவது முஸ்தஹப் விரும் பத்தக்க நபி வழியாகும். ஆனால் வித்ருடைய குனூத்தில் பகிரங் கமாக ஓதிய தற்கான எந்த சான்றும் நபி மொழிகள் எதிலும் இடம்பெற வில்லை. ஆகவே கடமையான நிலைகளில் கூறப்படும் ஏனைய திக்ர்கள் போன்று இதனையும் (மௌன மாகக்) கூறுவதே முறையாகும். (பார்க்க: தல்ஹீ ஸுல் ஹபீர். (பா:1.பக்:490) என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும்,

    وَالْمُخْتَارُ فِي الْقُنُوتِ الْإِخْفَاءُ لِأَنَّهُ دُعَاءٌ ، وَاَللَّهُ أَعْلَمُ . نصب الراية في تخريج أحاديث الهداية - (ج 3ص 177)

    குனூத்தில் மௌனம் காப்பதே தேர்ந் தெடுக்கப்பட்ட சொல்லாகும். ஏனெனில் அது துஆவாகும். (அல்லாஹ் மிக அறிந்தவன்), என இமாம் ஸைலயி (ரஹ்) அவர்களும் குறிப்பிடும் செய்திகளை இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும்.

    வித்ரு தொழுகை எந்த நாளும் தொழ வேண்டிய தொழுகை யாகும். அப்படி தொழுகின்றபோது வித்ரில் குனூத் ஓத வேண்டுமே தவிர ரமழானில் 15ஆவது இரவுக்கு பிறகு மட்டும் வித்ரில் குனூத் ஓதுவது ஆதாரமில்லாத செய்தியாகும்.

    (குறிப்பு: வித்ரு தொழுகை இரவில் ஒருமுறை தொழுவது மட்டும்தான். பள்ளியில் ஜமாஅத்துடன் தராவீஹ்யில் வித்ரு தொழுதுவிட்டு மறுபடியும் ஸஹருக்கு வித்ர் தொழுவது என்பது ஹதீஸில் கூறப்படாத விடயமாகும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.)