×
நபித்துவ அத்தாட்சிகள்

நபித்துவ அத்தாட்சிகள்

إنَّ الحمدَ للَّه، نحمده ونستعينه ونستغفره، ونعوذ باللَّه من شرور أنفسنا ومن سيِّئات أعمالنا، من يهده اللَّه فلا مُضِلَّ له، ومن يُضلِلْ فلا هاديَ له، وأشهد أن لا إله إلَّا اللَّه وحده لا شريك له، وأشهد أنَّ محمداً عبدُه ورسوله، صلَّى اللَّه عليه وعلى آله وأصحابه وسلَّم تسليماً كثيراً.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனைப் புகழ்கின்றோம், அவனிடம் உதவிதேடுகின்றோம், மேலும் அவனிடம் பாவமண்ணிப்பும் தேடுகின்றோம். அல்லாஹ்விடம் எமது கெடுதிகளிலிருந்தும், எமது கெட்ட செயல்களிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றோம். மேலும் அல்லாஹ் தனித்தவன், இனைதுனையற்றவன் என்றும், முஹம்மத் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் சாட்சிபகர்கின்றேன்.

அல்லாஹ், அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மீதும் அதிகமாக ஸலாத்தும் ஸலாமும் சொல்லியருள்வானாக.

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை உரியமுறையில் பயந்துகொள்ளுங்கள், இரகசிய மற்றும் பரகசிய நிலையிலும் அவனது கண்கானிப்பின் கீழ் இருங்கள்.

முஸ்லிம்களே! அல்லாஹ், இறைத்தூதர்களை, மனிதர்களை நேர்வழிப்படுத்துவதற்காக அனுப்பிவைத்தான். அவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வஹ்யின் மூலமாக ஓரிறைக்கொள்கையை பரிபூரணப்படுத்தக்கூடியவர்களாகவும், அல்லாஹ்வை வணங்குவது மற்றும் நற்பண்புகளின்பால் அழைக்கக்கூடியவர்களாகவும் இருந்தனர். இறைத்தூதர்கள் மீதான அடியார்களின் தேவையானது, அவர்களது நீர் ஆகாரம் மற்றும் சுவாசத்தேவையைவிடக் கடுமையானதாகும். ஏனெனில் மகிழ்ச்சி, வெற்றி, மற்றும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான வழி அவர்களது கைகளிலேதான் உள்ளது.

பூரண அறிவு, சக்தி, படைப்புகளின் மீதாக தேவையின்மை ஆகிய பண்புகளில் அல்லாஹ் தனிமையானவன், இறைத்தூதர்கள், இவை மூன்றில் அல்லாஹ் கொடுத்ததைத் தவிர வேறு எந்த ஒன்றையும் சொந்தமாக்கிக்கொள்ளமாட்டார்கள். அல்லாஹ் அவனது நபியைப் பார்த்துக் கூறுகின்றான்:

ﵟوَلَآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ إِنِّي مَلَكٞﵞ

அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் (அனைத்தும்) என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை; நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன்; நான் ஒரு மலக்கு என்றும் கூறவில்லை.

நபிமார்கள் அல்லாஹ்வின் தூதர்கள், அவர்கள் கூறுகின்ற விடயங்களில் உண்மையானவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ் அவனது இறைத்தூதர்களுக்கு, அவனது சக்தி, அறிவு, ஆட்சியிலிருந்து பிரமாண்டமான அத்தாட்சிகளைக் கொடுத்தான்.

)مَا مِنَ الأَنْبِياءِ نَبِيٌّ إلَّا أُعْطِيَ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ البَشَرُ( (متفق عليه(

"எந்த ஒரு நபியும், அவரை மனிதர்கள் விசுவாசிக்கின்ற அளவு (அத்தாட்சிகள்) கொடுக்கப்படாமல் அனுப்பப்படவில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த அடிப்படையில், ஸாலிஹ் (அலை) அவர்கள் ஒரு பாராம் கல்லிலிருந்து ஒரு பெரும் ஒட்டகையைக் கொண்டுவந்தார்கள். இப்றாஹீம் (அலை) அவர்கள் பெரும் நெருப்பில் எறியப்பட்டார்கள், ஆனால் அது அவர்களை நோவிக்கவில்லை, மூஸா (அலை) அவர்களுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகள் வழங்கப்பட்டன: கம்பினால் கடலின் மீது அடித்தார்கள், அது பிளந்து, ஒவ்வொரு பகுதியும் பெரும் மலைகளைப் போன்று காட்சியளித்தன, இன்னும் அவரது தடியை கீழே போட்டபோது, அது பெரும் பாம்பாக மாறியது, தாவூத் (அலை) ஸ{லைமான் (அலை) ஆகிய இருவருக்கும் பறவைகளின் மொழி கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது, இன்னும் அவ்விருவருக்கும் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தது. ஈஸா (அலை) அவர்கள் இயற்கையான குருட்டுத்தன்மை, குஷ்டம் போன்ற நோய்களைக் குனப்படுத்தக்கூடியவர்களாகவும், அல்லாஹ்வின் நாட்டப்படி இறந்தவர்களை உயிர்பிக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். மேலும் அவர்கள் (குழந்தைகள் கதைக்க முடியாத பருவமான) தாயின் மடியில் இருக்கும்போதே பேசி, தனது தாயை நிரபராதியாக்கி, தனது இறைவனையும் ஒருமைப்படுததினார்கள்.

அவர்கள் நன்னடத்ததையுடையவர்களாகவும், நற்பண்புகளையுடையவர்களாக இருந்தமையும், அல்லாஹ் அவர்களுக்கும், அவர்களைப் பின்பற்றியவர்களுக்கும் வெற்றியையும், சிறந்த முடிவைக் கொடுத்தமையும், அவர்களைப் பொய்பித்தவர்களுக்கும், அவர்களுக்கு மாறுசெய்தவர்களுக்கும் அழிவையும் வேதனையையும் கொடுத்தமையும் அவர்களின் உண்மைக்கு சான்று பகரக்கூடிய அந்தாட்சிகளாகும்.

அல்லாஹ் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அடுத்த நபிமார்களுக்கு வழங்கிய அத்தாட்சிகளை விட பெரிய மற்றும் அதிகமான அத்தாட்சிகளை வழங்கியுள்ளான். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (றஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: "(நபி (ஸல்)) அவர்களுடைய அத்தாட்சிகள் ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இவ்வுலகில் மிக உறுதியான செய்திகளின் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் எந்த அறிவையும் விட, நபி (ஸல்) அவர்களின் அந்தாட்சிகள் பற்றிய அறிவும், அவரது மார்க்கம் பற்றிய அறிவும் மிகத் தெளிவானதும் வெளிப்படையானதுமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

ﵟهُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗاﵞ

அவனே, தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கான அத்தாட்சிகள் சில:

அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்னரே, அவர்களது வருகை பற்றி ஏனைய நபிமார்கள் நன்மாராயம் கூறியமை. இப்றாஹீம் (அலை) அவர்களும், இஸ்மாஈல் (அலை) அவர்களும் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்:

ﵟرَبَّنَا وَٱبۡعَثۡ فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُزَكِّيهِمۡﵞ

எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன் நுண்ணறிவுடையவன்" (என்றும் பிரார்த்தித்தனர்.)

ஈஸா (அலை) அவர்கள் கூறினார்கள்:

ﵟوَمُبَشِّرَۢا بِرَسُولٖ يَأۡتِي مِنۢ بَعۡدِي ٱسۡمُهُۥٓ أَحۡمَدُﵞ

எனக்குப் பின்னர் "அஹ்மது" என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் உங்களுக்கு நற்செய்தி கூறுகின்றேன்"

அல்லாஹ் அவர்களை நபித்துவத்துக்கு முன்பே அறியாமைக் கால அனாச்சாரங்களிலிருந்தும், அதன் அழுக்குகளிலிருந்தும் பாதுகாத்தான், அவர் அவரது கையினால் எந்த சிலையையும் தொடவில்லை, மதுபானம் குடிக்கவுமில்லை, தடுக்கப்பட்ட ஒன்றுக்காக எவருடனும் உடண்படிக்கை செய்யவுமில்லை.

ஷைதானை விரட்டியடித்து, (நபி (ஸல்)) அவர்களின் தூதைப் பாதுகாப்பதற்காக, வானத்தின் பாதுகாப்பு எரி நட்சத்திரங்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் ஜின்கள் சுறினார்கள்:

ﵟوَأَنَّا لَمَسۡنَا ٱلسَّمَآءَ فَوَجَدۡنَٰهَا مُلِئَتۡ حَرَسٗا شَدِيدٗا وَشُهُبٗاﵞ

நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.

அவற்றில் சிலது, அல்குர்ஆன், மற்றும் அவர்களைப் பின்பற்றியவர்கள் சுமந்த விசுவாசத்தையும் அறிவையும் போன்று அவர்களது வாழ்நாளில் ஆரம்பித்து, இன்றுவரை நீடிக்கின்றது.

இன்னும் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக்கொடுத்த, அல்லாஹ் மாத்திரம் அறிந்த நடந்த, நடக்கவிருக்கின்ற விடயங்களை மிகத்துல்லியமாக அறிவித்தமையும் நபித்துவத்திறகான அந்தாட்சியாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

ﵟتِلۡكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهَآ إِلَيۡكَۖ

مَا كُنتَ تَعۡلَمُهَآ أَنتَ وَلَا قَوۡمُكَ مِن قَبۡلِ هَٰذَاۖ فَٱصۡبِرۡۖ إِنَّ ٱلۡعَٰقِبَةَ لِلۡمُتَّقِينَﵞ

11:49. (நபியே!) இது (உங்களுக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹீ மூலமாகவே நாம் இதனை உங்களுக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீங்களோ அல்லது உங்களுடைய மக்களோ இதனை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப் போல் நீங்களும் கஷ்டங்களைச்) சகித்துப் பொறுத்திருங்கள். நிச்சயமாக முடிவான வெற்றி இறை அச்சம் உடையவர்களுக்குத்தான்.

நபி (ஸல்) அவர்கள் முன்சென்ற செய்திகளில்: ஆதம் (அலை) அவர்களுக்கு வானவர்கள் சிரம் தாழ்த்திய செய்தி, இப்லீஸ_ம் அவனது அகங்காரமும், முன்னைய நபிமார்கள் பற்றிய ஆச்சரியமான, எமக்கு முன் வந்த சமூகத்தினர் பிளவுபட்ட செய்திகள், குகைவாசிகளின் செய்தி, யானைக்காரர்களின் செய்தி போன்ற செய்திகளை எங்களுக்குச் சொல்லியுள்ளார்கள்.

அல்குர்ஆனில் உள்ளதைப் போன்று ஒர் அத்தியாயத்தைக் கொண்டுவரும்படி அல்லாஹ் சவால்விட்டு, மறுமைநாள் அதை எவருக்கும் செய்யமுடியாது என்பதையும் அறிவித்தான். நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பலயீனப்பட்ட நிலையில் இருந்தபோது அல்லாஹ் கூறினான்:

ﵟسَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَﵞ

54:45. அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.

அது நீண்ட நாட்களின் பின் உண்மையானது. பத்ர் யுத்தம் நடைபெற முன்னரே குறைசிக் காபிர்களின் தலைவர்கள் கொலைசெய்யப்படும் இடங்களை முஸ்லிம்களுக்குக் காட்டினார்கள், "இது இன்னார் கொலைசெய்யப்படும் இடம்" என்று கூறினார்கள். அனஸ் (றழி) அவர்கள்;: 'றஸ{ல் (ஸல்) அவர்கள் அவர்களது கையை வைத்து: இங்கே, இங்கே என்று இடங்களைக் காட்டினார்கள், றஸ{ல் (ஸல்) அவர்கள் கையினால் காட்டிய இடங்களை விட்டும் அவர்கள் சிறிதும் விலகியிருக்கவில்லை' கூறினார்கள். (முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் கைபருக்குச் சென்றபோது, அல்லாஹ{ அக்பர் என்று கூறிவிட்டு: (கைபர் முடக்கப்பட்டுவிட்டது) என்று கூறினார்கள், பின்னர் அல்லாஹ் அவர்களுக்கு அதன் வெற்றியைக் கொடுத்தான்.

ரோமர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் ஒரு படையை அனுப்பினார்கள், அவர்களது செய்தி வருமுன் அவர்களில் உயிர்தியாகம் செய்தவர்களைக் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

பாரசீகர்கள் ரோமர்களை நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே வெற்றிகொள்வார்கள் எனக் குறிப்பிட்டார்கள், கிஸ்ரா மன்னனின் தூதுவர், ஒரு கடிதத்தக் கொண்டு நபியவர்களிடம் வந்தபோது: "எனது இறைவன் உனது தலைவரை இன்று கொன்றுவிட்டான்" அவனுக்குக் கூறினார்கள்.

தபூக் யுத்தத்திற்கு சென்றுகொன்டிருந்தபோது: "இன்று கடுமையான காற்றடிக்கும், உங்களில் எவரும் எழுந்து நிற்க வேண்டாம்" என்று கூறினார்கள்.

இன்னும் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மரணம் நெருங்கியதை அறிவித்தார்கள், மின்பரில் இருந்து கொண்டு: 'ஓர் அடியான், அவனுக்கு உலக இன்பம் வழங்கப்படுவது, அல்லது அல்லாஹ்விடமுல்லவை, இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி வேண்டப்பட்போது, அவன் அல்லாஹ்விடமுள்ளதைத் தேர்ந்தெடுத்தான்' என நபி (ஸல்) அவர்கள் கூறவே, அபூபக்ர் (றழி) அவர்கள் அழுதுவிட்டு: 'எமது பெற்றோர்கள் உங்களுக்கு சமர்ப்பனம்' என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்) இது நடந்து சில நாட்களில் நபியவர்கள் இவ்வுலகுக்கு விடைகொடுத்தார்கள்.

அவரது மரணத்துக்கு 100 வருடங்களுக்குப் பின் இன்று பூமியுள்ள அவர்களின் தோழர்களில் யாரும் உயிருடன் இருக்கமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அது அவர்கள் கூறியதைப் போன்றே நடந்தேரியது.

இன்னும் பைதுல் மக்திஸின் வெற்றி பற்றியும், அதன் பின் முஸ்லிம்களை அழிக்ககூடிய வயிற்றுப்போக்கு நோய் வரும் என்றும், அதன் பின் பணம் அதிகரிக்கும், அதை யாருக்கும் கொடுததாலும், அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் அறிவித்தார்கள். அவை அவ்வாரே நடந்து முடிந்தது: பைதுல் மக்திஸ் வெற்றிகொள்ளப்பட்டது, ஷாம் தேசத்தில் வயிற்றுப்போக்க நோய் ஏற்பட்டது, இவை இரண்டும் உமர் (றழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றன. பின் உஸ்மான் (றழி) அவர்களின் காலத்தில் பணம் அதிகரித்தது, சிலருக்கு 100 தீனார்கள் கொடுக்கப்பட்டாலும் அதைக்கண்டுகொள்ளவில்லை.

இன்னும், பெரும் நகரங்கள் வெற்றிகொள்ளப்படும் என்றும், அவற்றுக்கு மதீனாவாசிகள் சொகுசைத் தேடிச்செல்வார்கள் என்றும் அறிவித்துவிட்டு: 'அவர்கள் அறிவார்கள் என்றிருந்தால், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது' என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

இன்னும், கிஸ்ரா, கைஸர் ஆகிய இரு மன்னர்களும் அழிவார்கள், அவ்விரு மன்னர்களின் சொத்துக்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

இன்னும், இவ்வுலகம் இன்பங்கள் தனது சமூகத்தினருக்கு திறக்கப்படும் என்றும், முன்னிருந்தவர்கள் அதற்கு போட்டிபோட்டதைப் போன்று அவர்களும் போட்டிபோடுவார்கள் என்றும், தனது சமூகம் முன்னிருந்த சமூகங்களுக்கு ஒப்பாகுவார்கள், அவர்கள் அவர்களது வழியையே பின்பற்றுவார்கள், அவர்கள் உடும்பின் பொந்துக்கள் நுழைந்தால் இவர்களும் நுழைவார்கள் என்றும் அறிவித்தார்கள். (புஹாரி, முஸ்லிம்).

அவ்வப்போது நடைபெறக்கூடிய மறுமைநாளின் அடையாளங்களையும் தெளிவுபடுத்தினார்கள்: அறிவு குறைவது, மடமை அதிகரிப்பது, குழப்பங்கள் தோன்றுவது, கொலை அதிகரிப்பது, மனிதர்கள் மாளிகைகள் கட்டிப் பெறுமையடிப்பது போன்றன அதற்கான உதாரணங்களாகும். ஹ{தைபா (றழி) அவர்கள் கூறினார்கள்: 'றஸ{ல் (ஸல்) அவர்கள் எங்கள் முன் நின்று, அன்று முதல் மறுமைநாள் தோன்றும் வரை நடைபெறும் அனைத்தையும் தெளிவுபடுத்தினார்கள். அதை மனனமிட்டவர்கள் மனனமிட்டனர், மறந்தவர்கள் மறந்தனர்.' (புஹாரி, முஸ்லிம்)

இன்னும், வானில் கண்ட காட்சிகளையும் சொன்னார்கள்: அல்லாஹ் அவரது உயிருடன் சேர்ந்த உடலை மக்காவிலிருந்து அஸ்மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கும், பின் அங்கிருந்து வானில் ஸித்ரதுல் முன்தஹா வரைக்கும் இஸ்ரா, மிஃராஜ் பிரயாணம் மேற்கொள்ள வைத்தான். பின் அவ்விரவிலேயே மக்கா திரும்பினார்கள், அங்கு கண்ட சுவனம், நரகம், அதிலுள்ளவர்கள், ஸித்ரதுல் முன்தஹா, அண்ட சராசரங்களின் திட்டங்களை எழுதும் பேனாக்களின் சப்தம் போன்றவற்றைப் பற்றியும் மக்களுக்கு அறிவித்தார்கள்.

கண்களுக்குப் புலப்படக்கூடிய அத்தாட்சிகளினால் அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்தினான்: ஓர் அத்தாட்சியாக சந்திரனை இரு பகுதிகளாகப் பிளக்கவைத்தான், அதை மக்கா மற்றும் வேறு இடங்களிலுள்ளவர்களும் கண்டனர்.

நபியவர்களின் நபித்துவத்தின் அத்தாட்சிகள் மனிதர்களிலும் வெளிப்பட்டன, ஹஜ்ஜதுல் வதாவின் குத்பாவின் போது, ஓர் இலட்சத்துக்கும் அதிகமான மனிதர்கள் இருந்தனர், அல்லாஹ் அவர்களது செவிபுலனை நபியவர்களுக்குத் திறந்து கொடுத்தான், அனைவரும் அவர் சொன்னதைக் செவிமடுத்தனர். (அபூ தாவூத்)

அனஸ் (றழி) அவர்களுக்கு நிறையக் குழந்தைகளும் சொத்துக்களும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள், அவர் உயிருடன் இருக்கும்போதே 120 கும் அதிகமான அவருக்குப் பிறந்த குழந்தைகள் இறந்துள்ளனர். (புஹாரி, முஸ்லிம்)

அபூ ஹ{றைறா (றழி) அவர்களையும், அவரது தாயையும் முஃமின்களுக்கு விருப்பத்துக்குறியவர்களாக ஆக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். அபூ ஹ{றைறா (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'எந்த ஒரு முஃமினும் என்னைக் கண்டால் அல்லது என்னைப் பற்றிக் கேள்விப்பட்டால் என்னை விரும்பிவிடுவார்கள்.' (முஸ்லிம்)

உர்வதுல் பாரிகி (றழி) அவர்களுக்கு வியாபாரத்தில் பரக்கத்துக் கிடைக்க வேண்டும் என்று பிராரத்தித்தார்கள், அவர் மன்னை விற்றாலும் இலாபம் ஈட்டக் கூடியவராக இருந்தார்கள். (புஹாரி)

அப்துல்லாஹ் பின் அதீக் (றழி) அவர்களின் கால் உடையவே, அதை றஸ{ல் (ஸல்) அவர்கள் தடவக் குனமடைந்தார்கள். (புஹாரி)

அலி (றழி) அவர்களின் கண்ணில் நோய் இருந்ததனால், அவற்றில் நபி (ஸல்) அவர்கள் அவரது உமிழ்நீரை பூச, அவற்றில் வருத்தம் இல்லாமல் இருந்ததைப் போன்று குணமடைந்தார்கள். (புஹாரி, முஸ்லிம்)

நபித்துவத்துக்கான அத்தாட்சிகள் கால்நடைகளிலும் வெளிப்பட்டன. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஓர் அன்ஸாரி ஸஹாபியின் தோட்டத்தினுள் நுழைந்தார்கள், அதிலே ஓர் ஒட்டகம் இருந்தது, அவ்வொட்டகம் றஸ{ல் (ஸல்) அவர்களைக்கண்டதும் அழுதது. றஸ{ல் (ஸல்) அவர்களை அதை தடவியதும், அமைதியானது. அப்போது றஸ{ல் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் சொந்தக்காரனைப் பார்த்து: 'அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்த இம்மிருகத்தின் விடயத்தில் அவனைப் பயப்படமாட்டீர்களா? நீ அதை பட்டனிபோடுவதாகவும், கஷ்டப்படுத்துவதாகவும் என்னிடம் முறையிட்டது'. என்றார்கள். (அபூ தாவூத்)

'றஸ{ல் (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கழுதை இருந்தது, றஸ{ல் (ஸல்) அவர்கள் வெளியே சென்றுவிட்டால், அது அங்குமிங்கும் துள்ளிக் குதித்து விளையாடி, கடுமையாகும், றஸ{ல் (ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள் என்பதை உணர்ந்தால், றஸ{ல் (ஸல்) அவர்களை நோவினைப்படுத்தாமலிருப்பதற்காக, அசையாமல், சப்தமிடாமல் இருக்கம்' என ஆஇஷா (றழி) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

அவர்களது அத்தாட்சிக்கான இன்னொரு உதாரணம்: நீரும் ஆகாரமும் அதிகப்படுத்திக் கொடுக்கப்பட்டமை. ஹ{தைபிய்யா உடண்படிக்கையின் போது, நபி (ஸல்) அவர்களுடன் 1500 தோழர்கள் இருந்தனர். றஸ{ல் (ஸல்) அவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் அவர்களது கையை இடவே, ஊற்றுக்கண்களைப் போன்று விரல்களுக்கு இடையே தண்ணீர் ஊற்றெடுத்தது, நாம் அதில் குடித்து வுழூவும் செய்தோம், நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்? எனக்கேட்டதற்கு: ஓர் இலட்சம் பேர் இருந்தாலும் போதுமானதாக இருந்திருக்கும், நாம் 1500 பேர் இருந்தோம்' என ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)

தாதுற்றிகாஃ யுத்தங்களின்போது நபி (ஸல்) அவர்கள் சிறிதளவு நீரை ஒரு சிறு பாத்திரத்தில் ஊற்றினார்கள், படைவீரர்கள் அனைவரும் தத்தமது பாத்திரங்களை அதன் மூலம் நிரைத்துக்கொண்டார்கள்.

கய்பர் யுத்தத்தின் போது, உணவில் பற்றாக்குறை ஏற்பட்டது, அப்போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடமிருந்த உணவுகளை ஒன்று சேர்க்கச்சொல்லி, அதில் பரக்கத்து வேண்டிப் பிரார்த்தித்தார்கள், அனைவரும் அதை உண்டு பசியாரினார்கள், அவர்கள் 1500 பேராக இருந்தனர்.

தபூக் யுத்தத்தில் றஸ{ல் (ஸல்) அவர்களுடன் 30000 படைவீரர்கள் நீர் தேடிக்கொண்டிருந்தனர், றஸ{ல் (ஸல்) அவர்கள் அங்கிருந்த ஓர் ஊற்றில் வுழூ செய்தார்கள், பிறகு அதிலிருந்து அனைவரும் நீர் அருந்தும் அளவுக்கு நீர் நிரம்பிவழிந்தது. (முஸ்லிம்)

நாம் றஸ{ல் (ஸல்) அவர்களுடன் இருந்தோம், அங்கே இருந்த ஒரு தட்டில் காலை முதல் மாலை வரை உண்ணக்கூடியவர்களாக இருந்தோம், 10 பேர்கள் எழும்ப, 10 பேர்கள் உட்காருவார்கள், 'எங்கிருந்து இது கிடைக்கிறது' என்று கேட்டோம், 'எதை வைத்து ஆச்சரியப்படுகின்றீர்கள்' –வானத்தைக் காட்டி- இங்கிருந்துதான் கிடைக்கின்றது' என்று கூறினார்கள் என் ஸமுறா பின் ஜுன்துப் (றழி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

நபித்துவத்தின் அத்தாட்சியாக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு மரங்களையும், கற்களையும் வசப்படுத்திக் கொடுத்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒரு பல்லத்தாக்கில் தங்கினார்கள், அங்கே இரண்டு மரங்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி நகர்ந்து வந்து நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டது. (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது, ஜின்கள் அல் குர்ஆனை செவிமடுக்கக்கூடியவர்களாக இருந்தனர், ஜின்கள் அந்த இடத்தில் இருப்பதை, அவர்களைச் சூழ இருந்த ஒரு மரம் காட்டிக்கொடுத்தது. (புஹாரி, முஸ்லிம்)

றஸ{ல் (ஸல்) அவர்கள், தனது மஸ்ஜிதில் ஒர் ஈத்தம்மரக் குற்றியின் மீது நின்று பிரசங்கம் செய்பவர்களாக இருந்தார்கள், பிறகு அவர்களுக்கு ஒரு பின்பர் அமைக்கப்பட்டது, அதன் மீது ஏறி பிரசங்கம் செய்த போது, ஈத்தம் மரக்குற்றி சினுங்கி, சிறுபிள்ளைகளைப் போன்று அழுதது, றஸ{ல் (ஸல்) அவர்கள், அவர்களது கையை அதன் மீது வைத்தபோது, அது அமைதியானது. (புஹாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நான் நபியாக அனுப்பப்பட முன், மக்காவில் எனக்கு ஸலாம் சொல்லக் கூடியதான ஒரு கல்லை எனக்குத் தெரியும், இப்போதும் நான் அதை அறிகிறேன்' (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சில தோழர்களுடன் உஹ{த் மலையில் ஏறவே, அது நடுங்கியது, நபி (ஸல்) அவர்கள் அதற்கு அடித்துவிட்டு: 'உஹ{தே, உறுதியாக நில்' எனக்கூறவே, உறுதியாக நின்றது. (புஹாரி)

நபித்துவத்தின் அத்தாட்சியாக, அல்லாஹ் அவர்களை முன்பு எவருக்கம் இல்லாதளவு வானவர்களின் மூலமாக ஆதரவு வழங்கினான், மக்காவில் மலைகளுக்குப்; பொறுப்பான மலக்கு, காபிர்களை இரண்டு மலைகளைகளுக்கு நடுவே நசுக்க அனுமதி கேட்டபோது, அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கால அவகாசம் கேட்டார்கள்.

ஹிஜ்ரதத்தின்போது:

ﵟثَانِيَ ٱثۡنَيۡنِ إِذۡ هُمَا فِي ٱلۡغَارِ إِذۡ يَقُولُ لِصَٰحِبِهِۦ لَا تَحۡزَنۡ إِنَّ ٱللَّهَ مَعَنَاۖ

فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَيۡهِ وَأَيَّدَهُۥ بِجُنُودٖ لَّمۡ تَرَوۡهَاﵞ

(மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி "நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங் களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்தான்

பத்ர் யுத்தத்தின் போது சிறந்த வானவர்கள் நபியவர்களுடன் இணைந்து போர்புரிந்தனர், உஹ{த் யுத்தத்தின் போது ஜிப்ரீல் மீகாஈல் (அலை) அவர்கள் நபியவர்களுக்குப் பகரமாகக் கடுமையாக யுத்தம் செய்வது நபியவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. (புஹாரி, முஸ்லிம்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அகழ் யுத்தத்தில் கலந்துவிட்டு, பனூ குறைழா யுத்தத்திலும் கலந்தார்கள். (புஹாரி).

நபித்துவத்தின் அத்தாட்சிக்கான உதாரணம்: எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பது.

ﵟوَٱللَّهُ يَعۡصِمُكَ مِنَ ٱلنَّاسِﵞ

மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உங்களைக் காப்பாற்றிக் கொள்வான்.

ஆகவேதான் அவர்கள் அதிகமானவர்களாகவும், பலமானவர்களாக இருந்தும் கூட, நபியவர்களை அடையமுடியவில்லை.

சில யூதர்கள் அவர்களுக்கு எதிராக சூனியம் செய்தனர், அல்லாஹ் அதனை வெளிப்படுத்தி, அதனை செயலிழக்கவும் செய்தான், அவர்களுக்கு விசம் வைக்கப்பட்ட ஓர் ஆடு உணவுக்காக வைக்கப்பட்டபோது, அல்லாஹ் அதனை அவர்களுக்கு அறிவிததுக்கொடுத்தான்.

அவர்களின் நற்பண்புகளும், பூரணமான உடலமைப்பும் அவர்களின் நபித்துவத்தின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.

நபி (ஸல்) அவர்களின் நபித்துவம் பகிரங்கப்படுத்தப்பட்டு, மனிதர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது சொத்துக்களையும் ஆன்மாக்களையும் விட அவர்களை முற்படுத்தியும்கூட – அவர்கள் மரணிக்கின்றபோது, ஒரு தீனாரையோ, திர்கத்தையோ, ஆட்டையோ, கழுதையையோ விட்டுச் செல்லவில்லை. அவர் அவரது குடும்பத்துக்காக விட்டுச்சென்றது: அவரது கோவேரிக் கழுதையும், தனது குடும்பத்துக்காக 30 சாஉ தொலிக்கோதுமை வாங்குவதற்காக ஒரு யூதனிடம் அடமானம் வைத்த ஒரு கவசமும்தான்.

முஸ்லிம்களே, நபி (ஸல்) அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரையான அவரது வராலற்றை பார்க்கின்றபோது, அவர் உண்மையான அல்லாஹ் தூதர், எவரும் அவர் கொண்டுவந்ததைப் போன்று ஒரு வேதத்தைக் கொண்டுவரவில்லை, எல்லா நேரங்களிலும் அவர் அவரது சமூகத்திற்கு ஏகத்துவத்தைப் போதிக்கக்கூடியவராக இருந்தார், இன்னும் அவர்களுக்கு நல்லதை ஏவி, தீயதைத் தடுக்கக்கூடியவராக இருந்தார், இன்னும் அவர்களும் ஆச்சரியமான அத்தாட்சிகளைக் காண்பிக்கக்கூடியவராகவும் இருந்தார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் பூரணமான ஒரு மார்க்கத்தைக் கொண்டுவந்தார்கள், அது அனைத்து சமூகங்களின் நற்பண்புகளையும் தன்னகத்தே கொண்டது, ஆகவே அவரது சமூகம் அடுத்த சமூகங்களை விட சிறப்பானதாக மாறிவிட்டது, அச்சிறப்புக்களை அவர்கள் இவர் மூலமாகவே பெற்றுக்கொண்டனர், இவரிடமிருந்தே கற்றுக்கொண்டனர், இவரே அவர்களும் அவற்றைக் கொண்டு ஏவினார்கள், அதன் மூலமான அவர்கள் இந்த பூமியிலுள்ள மிக அறிவாற்றலுள்ளவர்களாகவும், மார்க்கப்பற்றுள்ளவர்களாகவும், சிறப்புக்குறியவர்களாகவும் மாறினர்.

أعوذ باللَّه من الشيطان الرجيم

ﵟقُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ

فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢاﵞ

18:110. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!"


இரண்டாவது உரை

الحمد للَّهِ على إحسانه، والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلَّا اللَّهُ وحده لا شريك له تعظيماً لشأنه، وأشهد أنَّ نبيَّنا محمداً عبدُهُ ورسوله، صلَّى اللَّهُ عليه وعلى آله وأصحابه وسلَّمَ تسليماً مزيداً.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தும் அத்தாட்சிகளை சிந்திப்பது ஈமானை அதிகரிக்கும், அவர்களின் நற்குணங்களைப் பற்றியும், அவரது மார்க்கப் பற்றியும் அதிகமாக சிந்திப்பதனால் உயர்வை அடைய முடியும், றஸ{ல் (ஸல்) அவர்களின் மூலமாக மாத்திரமே அல்லாஹ்வை அறியலாம்.

யார் தூதுத்துவத்தின் உண்மையையும், அதன் தெளிவான ஆதாரங்களையும் அறிய விரும்புகின்றாரோ அவர் அல் குர்ஆனை நாடவேண்டும். மனிதர்கள் அவர்களது தூதரை உண்மைப்படுத்துவது அவர்களின் மிகப்பெரிய தேவையாக இருப்பதால், நபிமார்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதற்கான வழிகளையும் இலகுபடுத்தினான், ஆகவே அவர்களை விசுவாசிப்பதில் பின்வாங்குகின்றவர் ஒரு பிடிவாதக்காரராகவும், மறுக்கின்றவர் ஒரு பெறுமைபிடித்தவராகவும்தான் இருப்பார்.

நபித்துவத்தை உண்மைப்படுததுவதிம், நபிக்குக் கட்டுப்படுவதிலும்தான் அனைத்து நலவுகளும் உள்ளன.