×
இஸ்லாம் அகிலங்களின் இரட்சகனின் மார்க்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்(ஆரம்பிக்கிறேன்)

இஸ்லாம் அகிலங்களின் இரட்சகனின் மார்க்கம்

உமது இரட்சகன் (கடவுள்) யார்?

இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரும் ஒரு வினாவும், மனித இனம் விடைதேடி அறிந்து கொள்ள வேண்டியதுமான மிகமுக்கியமான வினாவும் இதுவாகும்!

எமது இரட்சகன் வானங்களையும், பூமியையும் படைத்து, வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து,அதன் மூலம், மரங்களையும் முளைக்கச் செய்து கனிகளை வெளிப்படுத்தி எமக்கும், நாம் உணவாகக் கொள்ளும் விலங்குகளுக்கும் உணவாகக் தந்தவன் ஆவான்.அவனே எம்மையும், எமது மூதாதையர்களையும், இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்தவனாவான். அதில் இரவையும் பகலையும் படைத்து இரவை உறக்கத்திற்கும் ஓய்வுக்கும் உரிய நேரமாகவும்; பகல் பொழுதை உணவு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கான நேரமாகவும் அவனே ஆக்கினான்.மேலும் அவனே எமக்கு சூரியன், சந்திரன், நட்சத்திரம்- நட்சத்திரங்கள் - கடல் போன்ற வற்றை வசப்படுத்தி தந்ததோடு நாம் உட்கொள்ளும் பிராணிகளிலிருந்து அவற்றின் பால் மற்றும் உரோமங்களால் பயன்பெரும் பொருட்டு அவற்றையும் வசப்படுத்தி தந்துள்ளான்.

அகிலங்களின் இரட்சகனின் பண்புகள் யாது?

அகிலங்களின் இரட்சகனே இப்பிரபஞ்சத்தின் உயிரினங்களை படைத்தவன் ஆவான். அவனே சத்தியம் மற்றும் நேர்வழியின் பால் அவர்களுக்கு வழிகாட்டுபவன். அத்துனைப் படைப்புகளினதும் விவகாரங்களையும் நிர்வகிப்பவன். வாழ்வாதாரத்தை வழங்குவபவன். இம்மை மறுமையின் அனைத்து விடயங்களுக்கும் உரிமையாளன். அனைத்து விடயங்களும் அவனின் அதிகாரத்திற்கு உட்பட்டே நிகழ்கிறது. அவனைத் தவிரவுள்ள அனைத்தும் அவனுக்கே உரித்தானவையாகும்.நித்திய ஜீவனும் அவனே! அவனுக்கு மரணமோ தூக்கமோ கிடையாது அவனின் கட்டளைப் பிரகாரம் அனைத்து ஜீவராசிகளையும் நிர்வகிப்பவன். அவனின் அருள் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. வானம் பூமியில் அவனுக்கு மறைந்தது எதுவும் கிடையாது. அவற்றில் உள்ள அனைத்தையும் நன்கறிந்தவன்.அவனுக்கு ஒப்பாக எதுவுமில்லை. அவன் நன்கு செவிமடுப்பவன் யாவற்றையும் நன்கு அவதானிப்பவன்;. அவன் வானங்களுக்கு அப்பால் உள்ளான் தனது படைப்பினங்களிடமிருந்து எவ்விதத் தேவையுமற்றவன். படைப்புகள் யாவும் அவனின் பால் தேவையுடையவை. அவன் படைப்புகளில் இறங்க மாட்டான் அவ்வாறே அவனின் படைப்புகளில் எதுவும் அவனின் புனித தாத்தில்; (மெய்நிலை) இறங்கவும் மாட்டாது.மனிதன் மற்றும் விலங்குகளின் அமைப்புகளாக இருந்தாலும் சரி, சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் பிற கூறுகளைக் கொண்ட நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் அமைப்புகளாக இருந்தாலும் சரி, சமநிலை ஒழுங்குகளுடன் இப்புற உலகைப் படைத்து பரிபாலிப்பவன் இறைவன் (அல்லாஹ்) ஆவான்ز

அவனையன்றி வணங்கப்படுபவை அனைத்தும் தன்னிடம் எவ்வித நலனையோ தீங்கையையோ தன்வசம் வைத்திருப்பதில்லை. அவ்வாறிருக்க தன்னை வணங்குவோருக்கு அவைகளினால் எப்படி நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் ? அல்லது ஒரு தீங்குகளை அவைகளினால் தடுத்திட முடியும்?

எமது இரட்சகனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன?

மனிதர்கள் அனைவரும் அவனுக்கு செய்ய வேண்டிய கடமை என்னவென்றால், அவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும், அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது. அவனைத் தவிர அல்லது அவனுக்கு நிகராக எந்த ஒரு மனிதனையோ, கல்லையோ, நதியையோ, உயிரற்ற பொருளையோ, நட்சத்திரத்தையோ, வணங்கக் கூடாது. மாறாக அகில உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வையே இதய சுத்தியுடன் முற்றிலும் கட்டுப்பட்டு வழிபட வேண்டும.

மனிதர்களின் இரட்சகனாகிய அல்லாஹ் மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை யாது?(இறைவன் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?)

இவ்வுலகில் தன்னை இரட்சகனாக ஏற்று வாழ்வோருக்கு, பாதுகாப்பையும் அமைதியையும் நிம்மதியையும் திருப்தியையும் பெற்றுத்தரவல்ல சிறந்த வாழ்க்கையை அளிப்பதே அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். மறுமையில் நிரந்த இன்பத்தை அளிக்கவல்ல சுவர்க்கத்தில் அவர்களை நுழைவிப்பது அவனின் கடமையாகும். அவர்கள் அவனுக்கு; கீழ்ப்படியாமல், அவனது கட்டளையை மீறினால், அவர்கள் மகிழ்ச்சியிலும் சுகத்திலும் இருப்பதாக அவர்கள் நினைத்தாலும், அவர்களின் வாழ்க்கையை அவன் துன்பமும் நெருக்கடிமிக்கதாகவும் ஆக்கிவிடுவான், மேலும் மறுமையில் நித்திய வேதனை நிறைந்த நரகத்தில் நுழைவிப்பான் அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவர்.

இவ்வுலக வாழ்வின் இலக்கு என்ன? நாம் ஏன் படைக்கப்பட்டோம்?

கண்ணியமிக்க இரட்சகனான அல்லாஹ் எம்மை உன்னதமான ஒரு நோக்கத்திற்காக படைத்திருப்பதாக குறிப்பிடுகிறான். அதாவது அவனை மாத்திரம் வணங்கி வழிபடவேண்டும் அவனுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது. அத்துடன் இப்பூமியை நன்மை மற்றும் சீர்த்திருத்தம் போன்றவைகளால் வளப்படுத்திட வேண்டும் எனவும் எமக்கு பொறுப்புச் சாட்டியுள்ளான். தனது உண்மை இரட்டசகனல்லாத ஒன்றை வணங்கி வழிபடுபவன் தான் எதற்காக படைக்கப்பட்டுள்ளேன் என்ற நோக்கத்தை அறியமாட்டார் அதே போன்று தனது இரட்சகனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைiயும் உரிய முறையில் நிறைவேற்றமாட்டார். இந்தப்பூமியில் குழப்பம் புரிவோர் அவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணியை அறியாதவர் ஆவார்.

எமது இரட்சகனை, நாம் வணங்குவது எப்படி?

நிச்சயமாக இறைவன் எம்மைப் படைத்துவிட்டு எம்மை வீணாக விட்டுவிடவில்லை, அத்துடன் எமது வாழ்க்கையை அர்த்தமற்றதாக ஆக்கிவிடவில்லை. மாறாக மனிதர்களிலிருந்தே அவர்களுக்கு வழிகாட்ட தூதர்களை தேர்வு செய்தான். அவர்கள் மனிதர்களில் உண்ணதப் பண்பாளர்கள், மிகவும் தூய்மையான உள்ளம் படைத்தவர்கள், எனவே அவர்களுக்கு அவனின் தூதுச்செய்திகளை இறக்கியருளினான். அத்தூதுத்துவமானது இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளையும் மறுமை நாளுக்காக மரணத்தின் பின் மக்கள் எழுப்பாட்டப்டுவார்கள் அது விசாரணையும் கூலியும் வழங்கப்படும் நாள் எனும் விடயங்களையெல்லாம் உள்ளடக்கியிருந்தது.அத்தூதர்கள் தங்களது இரட்சகனை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் வணக்க வழிமுறைகள் மற்றும் அவை நிறைவேற்றப்பட வேண்டிய நேரங்கள், அவ்வணக்க வழிபாடுகளுக்கு இம்மை மறுமையில் கிடைக்கும் வெகுமதிகள் பற்றிய விடயங்களையும் எத்தி வைத்தார்கள். அது மாத்திரமின்றி உணவு, பானம், திருமணம் போன்ற விடயங்களில் இறைவன் தடுத்தவைககள் குறித்தும் எச்சரித்தார்கள். மேலும் அவர்களை உயர்குணங்கள் பண்பாடுகளின் பால் வழிப்படுத்தியதோடு தீய குணங்களிலிருந்தும் தடுத்தார்கள்.

இறைவனிடத்தில் (அல்லாஹ்விடத்தில்) ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்ன?

அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஆகும். இதைத்தான் அவனின் தூதர்கள் யாவரும் மக்களுக்கு எத்திவைத்தார்கள். இஸ்லாம் தவிர்ந்த வேறு எந்த மதங்களையும் அல்லாஹ் மறுமையில் ஏற்றுக்கொள்ளமாட்டான். இஸ்லாம் அல்லாத எந்த மார்க்கத்தை மனிதர்கள் ஏற்றுக் கொண்டாலும் அது அசத்திய மார்க்கமாகும். அதனால் எவ்வித நன்மையும் கிடையாது. மாறாக அது இம்மை மறுமையில் அவனுக்கு பெரும் துயராக அமைந்து விடும்.

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகள் என்ன?

இஸ்லாம் ஒரு இலகு மார்க்கமாகும். அதனை இறைவன் அடியார்களுக்கு இலகுவானதாக அமைத்துத் தந்துள்ளான். இதன் மிகப்பெரும் அடிப்படை அல்லாஹ் படைத்து பரிபாலிப்பவன், உண்மையான இறைவன் என ஏற்று விசுவாசிப்பதோடு, அவனின் மலக்குமார்கள், வேதங்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் மறுமை நாள், விதி போன்றவற்றை நம்புவதாகும். அத்துடன் அல்லாஹ்வைத்தவிர உண்மையான கடவுள் வேறு யாரும் இல்லை, என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சான்று பகர்வதும், கடமையான தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத் விதியாகும் அளவிற்கு செல்வம் இருந்தால் அதில் ஸகாத் கொடுப்பதும், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதும், வசதியிருந்தால் அல்லாஹ்வின் கட்டளைப்பிரகாரம் நபி இப்ராஹீம் (அலை) அவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட கஃபாவை தரிசித்து ஹஜ் கடமையை நிறைவேற்றுதலும் வேண்டும்.அத்துடன் அல்லாஹ் ஹராமாக்கியுள்ள இணைவைத்தல், கொலை செய்தல், விபச்சாரம், ஹராமான செல்வத்தை உண்ணுதல் போன்ற தடைசெய்யப்பட்ட வற்றை தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் அல்லாஹ்வை ஈமான் கொண்டு –நம்பி- அவனால் விதிக்கப்ப்ட்ட வணக்க வழிபாடுகளை செய்தால் ஒருவன் முஸ்லிமாக இவ்வுலகில் மாறிவிடுகிறான். மறுமையில் அவனுக்கு அல்லாஹ் நிரந்தரமான முடிவே இல்லாத சுவனத்தையும் இன்பத்தையும் அளிக்கிறான்.

இஸ்லாம் ஓரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அல்லது இனத்திற்கானதா ?

இஸ்லாம் மனிதர்கள் அனைவருக்குமான அல்லாஹ்வின் மார்க்கமாகும். இதில் இறையச்சம், நற்காரியம் போன்ற விடயங்களின் மூலமே தவிர எவருக்கும் சிறப்பேதும் இல்லை. மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்.

இறைத்தூதர்களின் உண்மை நிலை பற்றி மக்கள் எப்படி அறிந்து கொள்வர்?

மனிதர்கள் இறைத்தூதர்களின் உண்மை நிலை குறித்து பல்வேறுபட்ட வழிமுறைகளினூடாக அறிந்து கொள்வர். அவற்றுள் சில பின்வருமாறு :

அத்தூதர்கள் கொண்டு வந்த சத்தியம் மற்றும் நேர்வழி ஆகியவற்றை பகுத்தறிவும் சீரிய இயல்பும் ஏற்றுக்கொள்ளவதுடன், அவை சிறந்தது நலன்மிக்கது என பகுத்தறிவு சான்று பகர்கிறது. அது மட்டுமல்லாது இறைத்தூதர்களை தவிர இது போன்ற வழிகாட்டல் ஒன்றை எவராலும் கொண்டுவர முடியாது.

இறைத்தூதர்கள் கொண்டுவந்த வழிகாட்டுதலில் மனிதர்களின் மதங்கள் மற்றும் உலகியல் விடயங்களை மேம்படுத்துவதற்கு பொருத்தமான விடயங்கள் காணப்படுவதுடன் அவர்களின் விவகாரங்களில் உறுதிப்பாட்டை ஏற்படுத்தவும் அவர்களின் நாகரீகத்தை கட்டியெழுப்பதற்கான போதனைகளும் உள்ளடங்கியுள்ளது. குறிப்பாக அவர்களின் மதம், பகுத்தறிவு, செல்வம், மானம் போன்ற இன்றிமையாத விடயங்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டல்களும் அதில் காணப்படுகின்றன.

மேலும் இறைத்தூதர்கள் தாம் மக்களுக்கு அறிவித்துக் கொடுக்கும் நன்மையான விடயங்கள் மற்றும் நேர்வழி ஆகியவற்றிற்கு அவர்களிடம் கூலியை வேண்டுவதில்லை. மாறாக அவர்கள் தங்களின் இரட்சகனிடமே அதற்கான கூலியை எதிர்ப்பார்க்கின்றனர்.

இறைத்தூதர்கள் மக்கள் மன்றத்தின் முன் முன்வைத்தவை யாவும் எவ்வித சந்தேகமுமற்ற, அப்பழுக்கற்ற மிகவும் தெளிவான உறுதியான சத்திய போதனைகளாகும். அவற்றிற்கிடையே முரண்பாடோ குளறுபடிகளோ எதுவும் கிடையாது. அது மாத்திரமன்றி ஒவ்வொரு இறைத்தூதர்களும் தங்களுக்கு முன்வந்த நபிமார்களை உண்மைப் படுத்துவதோடு அவர்கள் எக்கொள்கையின் பால் மக்களை அழைத்தார்களோ அதே போன்று அவர்களும் மக்களை அழைக்கிறார்கள்.

நபிமார்கள் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்டோர் என்ற உண்மைக்கு சான்றாக தெளிவான அத்தாட்சிகள் மற்றும் பலமான அற்புதங்களை அவர்களின் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்துவதினூடாக அவர்களை உறுதிப்படுத்துகிறான். அதிலும் நபிமார்களுக்கு வழங்கப்பட்ட மிகவும் உண்ணதமான அற்புதங்களில் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனித அல்குர்ஆன் காணப்படுகிறது.

கண்ணியமிக்க அல்குர்ஆன் என்றால் என்ன?

அல்குர்ஆன் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வின் வேதம். (நூல்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலம் நபியவர்களுக்கு இறக்கியருளப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தை. அதில் அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், நபிமார்கள், இறுதிநாள் மற்றும் நன்மை தீமை பற்றிய இறைவிதி குறித்த மனிதர்கள் அவசியம் அறிய வேண்டிய அனைத்தும் காணப்படுகிறது.மேலும் கடமையான வணக்க வழிபாடுகள், கட்டாயம் தவிர்ந்து நடக்க வேண்டிய தடைசெய்யப்பட்ட விடயங்கள், நற்பண்புகள் தீய பண்புகள், மனிதர்களின் மத மற்றும் இம்மை மறுமை விவகாரகள் தொடர்பான எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது.இது ஒரு அற்புத நூல் இவ்வேதத்தைப் போன்ற ஒன்றை கொண்டுவருமாறு மனித குலத்திற்கு அல்லாஹ் சவால் விடுகிறான். மறுமை நாள் வரையில் இதில் உள்ள வார்த்கைள் மற்றும் அட்சரங்கள் மாற்றத்திற்குட்படாது இறக்கப்பட்ட மொழியில் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்.

மரணத்தின் பின் எழுப்பப்படுதல், மறுமை விசாரணை ஆகியவற்றிற்கான ஆதாரம் என்ன?

வளமற்ற வரண்ட நிலங்களை நீர் பார்த்திருப்பீர், அதில் மழை பொழிந்தால் அந்நிலமானது வெடித்து அதிலிருந்து பச்சைப் பசேலென காட்சிளிக்கும் தாவரங்கள் முளைக்கின்றன. எனவே வரண்ட நிலங்களை உயிர்ப்பிப்பதற்கு வல்லமை படைத்தவன் (அல்லாஹ்) மரணித்தோரை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதற்கு தகுதிபெற்றவன் என்பதை உணர முடியும்.அற்பமான இந்திரியத்துளியிலிருந்து மனிதனை படைத்தவன் மறுமையில் அவனை மீண்டு எழுப்பி அவனை விசாரித்து அவன் நன்மை செய்திருந்தால் நிறைவான கூலியையும் தீமை செய்திருப்பின் அதற்கான தக்க தண்டனைiயும் வழங்குவதற்கு ஆற்றலுடையவனாவான்.யதார்த்தத்தில் வானங்களையும், பூமியையும், நட்சத்திரங்களையும் படைத்தவனே மனிதனை மீண்டும் உருவாக்க ஆற்றல் படைத்தவன். ஏனென்றால், வானத்தையும் பூமியையும் படைப்பதை விட மனிதனை மீண்டும் இரண்டாவது தடவையாக உருவாக்குவது மிகவும் எளிதானதாகும்.

மரணத்தின் பின் மறுமையில் நிகழப்போவது என்ன?

மனிதர்களை தங்களது மண்ணறைகளிலிருந்த அல்லாஹ் மீண்டும் மீளெழச்செய்வான். பின் அவர்களின் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். யார் அவனை நம்பி தூதர்களை உண்மைப்படுத்தினார்களோ அவர்களை மனித மனதில் தோன்றிடாத நித்திய பேரின்பம் நிறைந்த சுவர்க்கத்தில் நுழைவிப்பான். யார் அவனை புறக்கணித்து நடந்தானோ மனிதன் கற்பனை செய்ய முடியாத அளவிளான நிரந்தர நரகத்தினுள் நுழைவிப்பான். ஒரு மனிதன் விசாரணையின் பின் சுவர்க்கம் அல்லது நரகத்தினுள் நுழைந்து விட்டால் அதில் மரணிக்காது நிரந்தரப் பேரின்பத்தில் அல்லது வேதனையில் இருப்பான்.

ஒரு மனிதன் இஸ்லாத்தினுள் நுழைய விரும்பினால் - இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக கடைப்பிடித்தொழுக விரும்பினால்- அவன் ஏது செய்ய வேண்டும்? ஏதாவது அவசியம் செய்ய வேண்டிய சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏதும் உண்டா? அல்லது சில முக்கிய பிரதானிகளின்; அனுமதி அவசியமா?

ஒருவர் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்றும் அது அகிலங்களைப்படைத்து பரிபாளிப்பவனான அல்லாஹ்வின் மார்க்கம் என்பதை அறிந்து கொண்டால் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள விரைய வேண்டும். அறிவுபடைத்த ஒருவர் தனக்கு சத்தியம் தெளிவாகிவிட்டால் அவர் தாமதிக்காது அதனை ஏற்று நடக்க முன்வரவேண்டும். அதுவே அவர் மீதுள்ள பொறுப்பும் கடமையுமாகும்.இஸ்லாத்தினுள் நுழைய விரும்பும் எவரும் குறிப்பிட்ட சடங்குகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் யாராவது ஒருவரின் முன்னிலையில் இருந்துதான் அதனை ஏற்க வேண்டும் என்பதும் கிடையாது, ஆனால் அது ஒரு முஸ்லிமின் முன்னிலையில் அல்லது இஸ்லாமிய நிலையமொன்றில் இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது. இல்லையெனில், அவர் பின்வரும் வார்த்தையை அதன் பொருளை அறிந்து அதனை ஆழமாக விசுவாசித்து கூறினால் போதுமானது: அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மையான கடவுள் எவரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்), இவ்வாறு அவர் கூறுவதால் முஸ்லிமாக மாறிவிடுகிறார். அதன் பிறகு அல்லாஹ் அவரின் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக இஸ்லாத்தின் ஏனைய சட்ட திட்டங்களை சிறிது சிறிதாக கற்றுக் கொள்ளவேண்டும்.

இஸ்லாம் அகிலங்களின் இரட்சகனின் மார்க்கம்

உமது இரட்சகன் (கடவுள்) யார்?

அகிலங்களின் இரட்சகனின் பண்புகள் யாது?

எமது இரட்சகனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன?

மனிதர்களின் இரட்சகனாகிய அல்லாஹ் மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை யாது?(இறைவன் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?)

இவ்வுலக வாழ்வின் இலக்கு என்ன? நாம் ஏன் படைக்கப்பட்டோம்?

எமது இரட்சகனை, நாம் வணங்குவது எப்படி?

இறைவனிடத்தில் (அல்லாஹ்விடத்தில்) ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்ன?

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகள் என்ன?

இஸ்லாம் ஓரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அல்லது இனத்திற்கானதா ?

இறைத்தூதர்களின் உண்மை நிலை பற்றி மக்கள் எப்படி அறிந்து கொள்வர்?

கண்ணியமிக்க அல்குர்ஆன் என்றால் என்ன?

மரணத்தின் பின் எழுப்பப்படுதல், மறுமை விசாரணை ஆகியவற்றிற்கான ஆதாரம் என்ன?

மரணத்தின் பின் மறுமையில் நிகழப்போவது என்ன?

ஒரு மனிதன் இஸ்லாத்தினுள் நுழைய விரும்பினால் - இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக கடைப்பிடித்தொழுக விரும்பினால்- அவன் ஏது செய்ய வேண்டும்? ஏதாவது அவசியம் செய்ய வேண்டிய சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏதும் உண்டா? அல்லது சில முக்கிய பிரதானிகளின்; அனுமதி அவசியமா?